என்.ஜி.பி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் IMIK டெக்னாலஜிஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது. என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியின் செயலாளர் தவமணி பழனிசாமி மற்றும் IMIK டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்வில் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியின் அகாடமி ஆஃப் கேரியர் டெவலப்மெண்ட்டின் இயக்குனர் மதுரா பழனிசாமி, கல்லூரி முதல்வர் பிரபா மற்றும் இயந்திரவியல் துறையின் துறைத்தலைவர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயந்திரவியல் துறை மாணவர்களுக்கு 3D பிரின்டிங் குறித்து விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்க்கான பயிற்சி வகுப்புகள் வழங்குவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.