சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 2022 பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். சூர்யாவின் 39வது படமான ‘ஜெய் பீம்’ படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் வெகுவாக பாராட்டிய நிலையில், சூர்யா தற்போது இயக்குநர் பாண்டிராஜின் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார்.

இதில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்க, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷிணி, இளவரசு ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். எதற்கும் துணிந்தவன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் 2022ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.