தேசிய அளவிலான ஜீனியர் கபடி போட்டி 2017

தேசிய அளவிலான இருபாலினர் பங்கேற்கும் ஜூனியர் கபடி போட்டி சி. எம். எஸ் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்தப் கபடி போட்டிகளை சி.எம்.எஸ் கல்லூரியுடன் இணைந்து கோயம்புத்தூர் மாவட்ட அமெச்சூர் கபடி சங்கமும், தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கமும் நடத்துகிறது. இதன் துவக்கவிழாவானது கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கோயம்புத்தூர் கமிஷ்னர் அமல்ராஜ் மற்றும் தேசிய அமெச்சூர் கபடி சங்கத்தின் பொதுச்செயலர் தினேஷ் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் கமிஷ்னர் அமல்ராஜ் IPS  கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்வில் சி.எம்.எஸ் கல்வி அறக்கட்டளையின் தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட கபடிக் கழகத்தின் தலைவர் நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்