டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம்: வானதி பங்கேற்பு

பிரதமர்  நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உட்பட 300க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஒடிசாவில் கடத்தி சித்திரவதைக்கு உட்பட்டு கொலை செய்யப்பட்ட மமிதா மெஹர் என்ற இளம் பெண் கொலை வழக்கின் பின்னணி ஆய்வு குறித்த அறிக்கையை பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும்  கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையிலான குழுவினர் தேசியத் தலைவர்  ஜே.பி. நட்டாவிடம் ஒப்படைத்தனர்.

இந்த தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வரவிருக்கும் 5 மாநில தேர்தல் குறித்து முன் மொழிதல் செய்தார்.