கற்பகம் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்பு

கற்பகம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் மற்றும் புத்தாக்க பயிற்சி வகுப்புகள் (Innovative training classes) நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாற்றம் பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் தலைவர் சுஜித் குமார்,  கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்கு கற்பகம் கல்வி குழுமங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை தாங்கினார், கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர் தனது உரையில், பொறியியல் படிப்பில் உள்ள  அனைத்துத் துறைகளின் சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவ மாணவிகளிடையே எடுத்துரைத்தார். இந்த உலகம் தற்சமயம் கணினி உலகை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து துறைகளுக்கும் சரிசமமான அளவில் வாய்ப்புகள் உள்ளது என்பதை பற்றியும் விளக்கினார்.

இந்த விழாவில் முதலாமாண்டு இளநிலை மற்றும் முதுநிலை வகுப்பு மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இணையவழியில் கலந்து கொண்டனர்.