மாநில சீனியர் தடகளப் போட்டி: எஸ்.டி.சி கல்லூரி மாணவ மாணவியர் வெற்றி

தமிழக தடகளச் சங்கத்தின் மூலம் 93 வது மாநில சீனியர் தடகளப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் அக்டோபர் 15 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி மாணவர் அஜித்குமார் 10 கிலோமீட்டர் நடைப் போட்டியில் போட்டி தூரத்தை 47 நிமிடம் 20 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். பெண்கள் பிரிவில் மாணவி ஜிஜீ உயரம் தாண்டும் போட்டியில் 1.65 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

மேற்கொண்ட சாதனையாளர்களை கல்லூரியின் தலைவர் விஜயமோகன், துணைத் தலைவர் சேதுபதி, செயலர் வெங்கடேஷ், முதல்வர் சோமு, முதன்மை இயக்குனர் பாரதி, துணை இயக்குனர்கள் ரேவதி, சதாம் உசேன் உள்ளிட்டோர் வாழ்த்திப் போராடினார்.