ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயிர் காக்கும் உபகரணங்களை தொடங்கி வைத்த அமைச்சர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயிர் காக்கும் உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா, சுப்பிரமணியம் புதன்கிழமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

பாஷ் (Bosch) நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலமாக, நோயாளிகளுக்கான மானிட்டர், வென்டிலேட்டர், என்ஐவி வென்டிலேட்டர்கள், நிறுவப்பட்டுள்ளது. இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா, சுப்பிரமணியம், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்தையும் தொடங்கி வைத்து நோயாளிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி,
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சுகுமாரன், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், பாஷ் (Bosch) நிறுவன கார் மல்டிமீடியா பொது மேலாளர் ஷைஜூ, அறம் அறக்கட்டளை நிறுவனர் லதாசுந்தரம், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.