கற்பகம் மருத்துவமனை சார்பாக இருசக்கர வாகன பேரணி

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை (அக்டோபர்) முன்னிட்டு (Karpagam Faculty of Medical Sciences & Research) கற்பகம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

கோவை பொள்ளாச்சி சாலை மாலுமிச்சம்பட்டியில் பேரணியை மருத்துவர்கள் அருண்குமார், ரங்கநாதன், கிருஷ்ணமூர்த்தி, அஸ்வின் மற்றும் கற்பகம் பல்கலைக்கழக முதன்மையர் தமிழரசி ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழிப்புணர்வு பேரணியானது ஈச்சனாரி, போத்தனூர், சுந்தராபுரம் வழியாகச் சென்று கற்பகம் பல்கலைக்கழகத்தில் நிறைவுபெற்றது.