இந்துஸ்தான் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இங்கு பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில் 4200 பேர் பரிசோதனை செய்து கொள்கின்றனர்.

கண் பரிசோதனை மேற்கொள்ள அரவிந்த கண் மருத்துவமனையில் இருந்து மருத்துவரும், செவிலியர்களும் பங்கு பெற்றனர். கல்லூரியின் மேலாண்மைத்துறை ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் இம்முகாமில் 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.