உத்தரவு நகல்களை இணையம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – கோவை நீதிமன்றம்

கோவை டான்பிட் நீதிமன்றத்தில் வழங்கப்படும் உத்தரவு நகல் கேட்டு விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், அன்று மாலையே இணையத மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தின் (டான்பிட்) தீர்ப்புகள், உத்தரவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், டிஜிட்டல் கையெழுத்துடன், இ- கோர்ட் வெப்சைட்டில், தினசரி பதிவேற்றம் செய்யப்படுகிறது.

எனவே மேல்முறையீடு செய்வதற்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆவணங்களின் நகல் கோரி( காப்பி அப்ளிகேஷன்) விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள்து.