நேரு கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் செயலர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணகுமார் மற்றும் கல்லூரி முதல்வர் அனிருதன் ஆகியோரின் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

விழாவில் புல முதன்மையர் ஜாணி, வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல்துறை உதவி ஆணையர் சதிஷ் குமார் கலந்து கொண்டு, மாணவர்கள் தன்னம்பிக்கை வளர்த்து கொள்ள முயற்சி செய்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சாதனை செய்ய வேண்டும் என்று பேசினார். விழாவின் நிறைவில் முதன்மையர் கனகரத்தினம் நன்றி கூறினார்.