கே.பி.ஆர் கல்லூரியில் காந்தி ஜெயந்தி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் சார்பில் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தின விழா “காந்தி ஜெயந்தி” கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் பாலுசாமி கலந்து கொண்டு, மகாத்மா காந்தி அவர்களின் வாழ்வியல் கோட்பாடுகளான உண்மை, அஹிம்சை, எளிமை, தூய்மை, போன்றவற்றை அனைவரும் கடைபிடித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என கூறினார்.

இவ்விழாவில் துறை முதன்மையர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மகாத்மா காந்தி உருவ படத்திற்கு மலர் தூவி அனைவரும் மரியாதை செலுத்தினர்.