காந்தி ஜெயந்தி: காங்கிரஸ் கட்சி சார்பாக நலத்திட்ட உதவிகள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை வீரகேரளம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மகாத்மாகாந்தி பிறந்த தினத்தை காந்தி ஜெயந்தி விழாவாக நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரகேரளம் பகுதியில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

முன்னதாக விழாவில் தேசிய கொடியேற்றி, பின்னர் தேசத்திற்காக உழைத்த காங்கிரஸ் பேரியக்க தியாகிகளுக்கு வீர வணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் அழகு ஜெயபால், மகேஷ் குமார், கணபதி சிவக்குமார், சௌந்தரகுமார், விஜயகுமார், பழயூர் செல்வராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.