கே.எஸ் பேக்கர்ஸின் 2 வது கிளை தொடக்கம்

கோவை வைசியாள் வீதியில் கே.எஸ்.பேக்கர்ஸின் இரண்டாவது கிளையை அதிமுக மாநகர் மாவட்ட தொழில் நுட்ப பிரவின் இணை செயலாளர் அம்மன் கோபாலகிருஷ்ணன் கடந்த வியாழக்கிழமை அன்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோவை செட்டி வீதியில் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற கே.எஸ். பேக்கரி & ஸ்வீட்ஸ் தனது இரண்டாவது கிளையை கோவை வைசியாள் வீதியில் தொடங்கியது.

இதன் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக கோவை மாநகர் மாவட்ட தொழில் நுட்ப பிரிவின் இணை செயலாளர் அம்மன் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு அடுமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.பேக்கர்ஸின் உரிமையாளர் சரவணன் திறப்பு விழா சலுகையா மூன்று நாட்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு 1 கிலோ இனிப்பு வாங்கினால் 1/2 கிலோ காரம் மற்றும், 1 கிலோ கேக் வாங்குபவர்களுக்கு 1/2 கிலோ கேக் இலவசமாக வழங்க உள்ளதாக தெரிவித்தார்.