இந்துஸ்தான் கல்லூரியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தினத்தைப் போற்றும் வகையில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் விழாவினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையில் பேராசிரியர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் சிறுசிறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் பிரியா சதீஷ் பிரபு, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், அனைத்து பேராசிரியர்கள் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.