கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தடுப்பூசி முகாம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு நாட்கள் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தடுப்பூசி முகாமைக் கல்லூரி முதல்வர் லட்சுமண சாமி தொடங்கி வைத்தார். இம்முகாமில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோருக்குக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் கோவிஷில்ட் தடுப்பூசியைச் செலுத்தினர். அத்தோடு பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.