ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவியர் தேசிய அளவில் வெற்றி

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவியரின் திறன்களை வளர்ப்பதற்காகப் பலவித சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ஐ.சி.டி அகாடமியும் பிற தொழில் நிறுவனங்களும் இணைந்து நடத்திய “ஸ்கில் எட்ஜ் 2021” நிகழ்ச்சியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவியர் 1,200 பேர் கலந்துகொண்டனர். ஆன்லைனில் சுயகற்றல் மூலமாக மாணவியருக்கு டிசைன் திங்கிங், சைபர் செக்யூரிட்டி, ஆர்பிஏ மற்றும் பிற தொழில்நுட்பங்களில் உயர் தகுதிகளைப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 456 கல்லூரிகளிலிருந்து 20,000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய அளவில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவியர் முதல் இடம் பெற்றனர்.