உலக துப்பாக்கி சுடும் போட்டி: கோவையில் இருவர் தேர்வு

பெரு நாட்டில் நடைபெற இருக்கிற உலக துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியின் சார்பாக பங்கேற்கும் குழுவில் கோவையைச் சேர்ந்த மகேஷ் பசுபதி 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிவேதிதா நாயர் என்பவர் இளையோருக்கான மகளிர் பிரிவில் தேர்வாகியுள்ளார்.

இதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் பரீதாபாத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற போட்டியாளர்களில் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 வரை பெரு நாட்டில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்திய துப்பாக்கி சுடும் அணியில் இளையோருக்கான பிரிவில் கோவையைச் சார்ந்த வீர்ர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை.

இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களில் தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள இருவருமே கோவையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.