நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி: வானதி பங்கேற்பு

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் ராம்நகர் பகுதியில் மாற்றுத் திறனாளர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மோடிமகள் நலத்திட்ட உதவிகளையும் சனிக்கிழமை (21.08.2021) வழங்கினார்.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை மக்கள் சேவை மையம் மற்றும் சக்ஷம் அமைப்பின் செயற்பாட்டாளர்களையும் அதன் செயல்பாடுகளை குறித்தும், மோடி மகள் திட்டம் மூலம் பெண் குழந்தைகள் பலர் பயனடைந்திருப்பதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கினார். மோடி மகள் திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சக்ஷம் தேவ கோவிந்தராஜன் கூறுகையில், 68 மாற்றுத் திறனாளர்களுக்கான செயற்கை கை, மூன்று சக்கர சைக்கிள்கள், ஒருவருக்கு பேட்டரி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம், இருபது மாற்றுத்திறனாளர் குடும்பங்களுக்கு தையல் இயந்திரம் போன்றவை வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.