சோர்வை போக்கும் வெள்ளை சோளம்…!

மக்காசோளம் பற்றி தான் நம்மில் பெரும்பாலனவர்கள் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சோளத்தில் வெண்சாமரச் சோளம், சிவப்பு சோளம், வெள்ளை சோளம், பழுப்புநிற சோளம், என பலவகைகள் உண்டு. சோளத்தில் உடலுக்கு தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கொழுப்புச்சத்து, நார்சத்து, மாவுச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின், நயசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், அஸ்கார்பிக் அமிலம் ஆகியவைகள் இருக்கின்றன. குறிப்பக வெள்ளை சோளத்தினால் உடலுக்கு ஏற்படும் நன்மை குறித்து இங்கு காண்போம்.

மாரடைப்பை தடுக்கும்:

வெள்ளை சோளத்தில் உள்ள அதிகபடியான நார்சத்து உடலின் இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதனால் ரத்தத்தில் கொழுப்பு இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், மாரடைப்பு வராமல் வெள்ளை சோளம் இதயத்தை பாதுகாக்கின்றது.

உடல் எடை குறையும்:

வெள்ளை சோளத்தில் நார் சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கின்றது. உடல் எடை அதிகம் ஏராமல் பாதுகாக்கின்றது. வெள்ளை சோளத்தை உணவாக உட்கொள்பவர்கள் அதிகம் பழத்தை எடுத்துக்கொண்டால் சருமம் நல்ல பளபளப்பை பெறும்.

எலும்புகளை வலுவடைய செய்யும்:

இதில் இருக்கும் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து எலும்புகளை வலுவடைய செய்கின்றது. அத்துடன் வயது முதிர்ச்சியால் ஏற்படும் நாட்பட்ட மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. எலும்பு தேய்மானமும் சரிசெய்யப்படுகின்றது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்:

சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் செள்ளை சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம். இதில் இருக்கும் கார்போஹைட்டிரேட் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடாமல் பாதுகாக்கின்றது. இதனால் உடல் எடை குறைந்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகின்றது.

செரிமானத்திற்கு உதவும்:

சோளத்தில் அதிகமான நார்சத்தும் மற்றும் மாவுசத்தும் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய வைக்கின்றது. இதிலிருக்கும் நார் சத்து உணவு மண்டலத்தை சுத்தம் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

சோர்வை நீக்கும்:

வெள்ளை சோளத்தில் தேவையான மினலர்ஸ், இரும்பு சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் காப்பர் சத்துக்கள் உள்ளதால் உடல் சுழற்சி முறையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை தானாக சரிசெய்கின்றது. உடலுக்கு தேவையான புத்துணர்சியை தந்து உடலை வலுபெற செய்கின்றது.

நோயை எதிர்த்து போராடும் ஆண்டி ஆக்சிடன்ட் இருக்கின்றது. இதனால் வயிற்று வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.