தமிழக உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் வழிகாட்டுதலில், பெரியகடைவீதி வார்டு 85, செட்டிவீதியில், பொதுமக்களுக்கு, கொரோனா நிவாரண உதவியாக அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் தொகுப்பை, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் வழங்கினார்.
இதில் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி. நாச்சிமுத்து, டவுன் பா. ஆனந்த், பெரியகடைவீதி பகுதிக்கழகம்- 1 பொறுப்பாளர் மார்க்கெட் எம். மனோகரன், 85 வது வட்டக் கழகப் பொறுப்பாளர் நா. தங்கவேல், வை. இளங்கோ, மார்க்கெட் எம். சோமு, கேபிள் பிரகாஷ், தாமஸ் வீதி ராஜா, சுரேஷ் நாராயணன், உமாபதி, பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆர். ஜி. ராமச்சந்திரன், வழக்கறிஞர் சிவகுமார், தொழிற்சங்க பழக்கடை சித்திக், எஸ்.முருகானந்தம், மகளிரணி புவனேஸ்வரி, தேவராஜன், கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.