ஆன்லைன் ரம்மிக்கு எதிரான தடை ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்திருந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கடந்த அதிமுக அரசு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கு எதிராக தடைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்துக்கான தடை உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி சஞ்சீப் பனர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு தீர்பளித்துள்ளது.