கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: 6 பேர் கொண்ட குழு ஆய்வு

கேரளாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் குறித்து, 6 பேர் கொண்ட குழுவை ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1- முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து, ஆய்வு செய்வதற்காக, 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த குழு கேரளாவில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளது.

மேலும், இக்குழு கேரளாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு என்ன காரணம்?, மூன்றாவது அலையை தடுக்க என்னென்ன தேவைகள் உள்ளது?, உருமாறிய கொரோனா வைரஸின் பாதிப்பு உள்ளதா? உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளது.