பழுதடைந்த டிராபிக் சிக்னல்களை மாற்றம் செய்ய ஆய்வு

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிராபிக் சிக்னல்கள் தொழில் நுட்பம் சம்பந்தமாக புதன்கிழமை (23.06.2021) ஆய்வு நடைபெற்றது.

கோவை மாநகரில் உள்ள பழுதடைந்த டிராபிக் சிக்னல்கள் மாற்றம் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கபட்டன. அதன் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த டிராபிக் சிக்னல் நிறுனங்களின் தரத்தை போலீஸ் துணை கமிஷனர் உமா , தலைமையிட துணை கமிஷனர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பிறகு போக்குவரத்து உதவி கமிஷனரிடம் துணை கமிஷனர்கள் செல்வராஜ் மற்றும் உமா, போக்குவரத்து சிக்னல் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினர்.