பாரதி நினைவு நூற்றாண்டு – கவியரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின், தமிழ்த்துறை பைந்தமிழ் மன்றமும், கவிதை பெட்டகம் மின்னிதழும் இணைந்து நடத்திய, பாரதி நினைவு நூற்றாண்டுக் கவியரங்கம் “வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற தலைப்பில்  புதன்கிழமை (05.05.2021) நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி வாழ்த்துரை வழங்கினார். இக்கவியரங்கிற்கு தமிழ்த்துறை இணைப்பேராசியர் ப.முத்துக் குமார வடிவேல் கவியரங்கத் தலைமை ஏற்று சிறப்பித்தார்.

இக்கவியரங்கில்  வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற தலைப்பில்15 மாணவர்கள் தங்களது கவிதைகளைப் பாடினர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுப் பெயருடன் கூடிய மின்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் கவிதைப் பெட்டகத்தின் நிறுவனர் சிவசக்திவேல் மாணவர்களை  வாழ்த்தினார்.

இதில் பேராசியர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.