கோவை மாவட்ட மைய நூலகத்தில் 69வது குடியரசுத் தின விழா

கோவை மாவட்ட மைய நூலகத்தில் இன்று (26.01.2018) 69வது குடியரசுத் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட மைய நூலகர் பே.ராஜேந்திரன் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தலைமையுரையாற்றினார். மூன்றாம் நிலை நூலகர் கோபாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். இரண்டாம் நிலை நூலகர் க.ரவிச்சந்திரன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மைய நூலகத்தின் பணியாளர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.