இனி கேரளா செல்ல இ-பாஸ் கட்டாயம்

தமிழகத்தில் இருந்து கேரளா சொல்வோருக்கு இன்று முதல் இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்த இணையதளம் மூலம் அனுமதி பெற வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

வாளையாறு, வேலந்தாவலம் உள்ளிட்ட 13 சோதனை சாவடிகள் மூடப்பட்டு கோவை வழியாக கேரளா சொல்வோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இ-பாஸ் பெறாமல் வரக்கூடிய பொதுமக்கள் திருப்பி அனுப்பட்டு வருகின்றனர். இன்று முதல் நாள் என்பதால் சோதனை சாவடிகளில் இருந்தவாறு இ-பாஸ் பதிவு செய்ய வைத்து அனுப்புகின்றனர். நாளை முதல் இபாஸ் பெறாமல் வருவேர் கட்டாயமாக திரும்பி அனுப்பப்படுவார்கள் என கேரள போலீஸ் தெரிவித்துள்ளனர்.