திருடுபோன 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் திரும்ப ஒப்படைப்பு

காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து திருடுபோன செல்போன்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டு  கண்டுபிடித்து திருப்பி கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் செல்வநாகரத்தினம் திருடுபோன விலையுர்ந்த 50க்கு மேற்பட்ட செல்போன்களை பொதுமக்களிடம் திரும்ப ஒப்படைத்தார். பின்னர் பொதுமக்களிடம் பேசிய காவல் கண்கணிப்பாளர் இதுவரை 1660 செல்போன்கள் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், திருடுபோன செல்போன்கள் சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்டத்தில் இன்னும் 400 செல்போன்கள் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.

பின்னர் பொதுமக்கள் தாமக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் எனவும் தொலைந்த செல்போன்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் எனவும் தெரிவித்தார். திருடுபோகும் செல்போன்கள் மூலம் குற்றவாளிகள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுக்கும் விதமாக பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.