பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடனகலை பயின்று வரும், கோவையை சேர்ந்த சமித்தாவின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி இன்று (12.4.2021நடைபெற்றது.

கோவையை சேர்ந்த ஸ்ரீ நாட்டிய நிகேதன் பள்ளியில் கடந்த 25 வருடங்களாக கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி,கல்லூரி மாணவிகளுக்கு பரத கலை உட்பட பல்வேறு நடனங்களை கற்று தந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நடனபள்ளியில் நடனகலை பயின்று வரும், கோவையை சேர்ந்த சமித்தாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

நேச்சோரபதி இரண்டாம் ஆண்டு பயின்று வரும் சமித்தா யோகா,களரி,கராத்தே போன்ற கலைகள் தெரிந்த இவர்,கடந்த பதினைந்து ஆண்டுகளாக குரு மிருதுளா ராயிடம், நடனம் கற்று வருகிறார்.

இந்த பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் சமித்தா சிறந்த நடனத்தை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.