கே.பி.ஆர் கல்லூரியில் தூய்மைப் பணியாளர்களுக்குப் பாராட்டு விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் உலக சுகாதார தினத்தை கொண்டாடும் விதத்தில் கல்லூரியில் பணிபுரியக்கூடிய சுகாதார மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் பணியைப் போற்றும் விதத்தில் பாராட்டு விழா (10.4.2021) நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி அவர்கள் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக தாட்ஸ் கிளினிக் (Thoughts Clinic) மருத்துவர் விஜயகுமார் கலந்துகொண்டு பேசுகையில்: கொடிய நோய் தொற்றாக விளங்கும் கொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த சுகாதாரப் பணியாளர்களையும் தூய்மைப் பணியாளர்களையும் பாராட்டி அவர்தம் மகத்தான சேவையே மனித சமுதாயத்திற்கு மிக முக்கியமானதொரு செயலாகும் எனக்கூறினார்.

தூய்மைப் பணியாளர்களின் சேவையை போற்றும் வகையில் அலுவலக மேலாளர் ரெங்கநாதன் கவிதை அரங்கேற்றம் செய்தார்.

தொடர்ந்து, ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் விஜயகுமார் அவர்களின்  கல்விப் பணியை பாராட்டி சிறந்த பேராசிரியர் எனும் இந்தியா ஐகானிக் எஜூகேஷன் அவார்ட் – 2021 (INDIA ICONIC EDUCATION AWARD – 2021) பெற்றிருப்பதை பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது. மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.