திரையரங்குகளில் கொரோனா தடுப்பு ஆய்வு

துடியலூரில் உள்ள தனியார் திரையரங்கம் மற்றும் ஆர்.எஸ் புரம் உழவர் சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி நேரில் பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆர்.எஸ் புரம் உழவர் சந்தை பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு,  முகக்கவசம் அணியாமல் இருந்த 27 நபர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

துடியலூரில் உள்ள தனியார் திரையரங்கில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றார்களா என பார்வையிட்ட பின்னர் சத்தி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மாலிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.