கோவையில் ஆண் சிறுத்தை உயிரிழப்பு

கோவை அருகே ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து அதன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

கோவை காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட போட்டுக்கடவு வனப்பகுதியில் இன்று காலை சுமார் 6 மணியளவில் வனப்பணியாளர்கள் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பசுங்கனிமேடு என்ற இடத்தில் துர்நாற்றம் வீசியுள்ளது. தொடர்ந்து அங்கு சோதனை செய்ததில், அப்பகுதியில் ஆண் சிறுத்த ஒன்று உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தையின் உடலைக் கைப்பற்றிய வனத்துறையினர், பிரதே பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே சிறுத்தை உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.