பல்துறை திறனறி போட்டிகள்

கோவை சரவணம்பட்டி டாக்டர் எஸ்.என்.எஸ் இராஜ லட்சுமி கலை அறிவியல் கல்லூரி சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ப்ரைன் ஃபெஸ்ட் 2021 (Brain fest 2021) பல்துறை திறனறி போட்டிகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.

கடந்த ஏழாம் தேதி துவங்கி ஆன்லைன் வழியாக நடைபெற்ற இப்போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து சுமார் 100 பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில்,பொது அறிவு, ஆங்கில புலமை, பகுத்தறிவு,  வீடியோ  படங்களில் உள்ள வடிவமைப்பு திறன், படைப்பு திறன் மற்றும்  செறிவூட்டல் போன்ற திறன்களின் அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் சிறந்த மாணவ,மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரி  முதன்மை செயல் அதிகாரி முனைவர் டேனியல், மற்றும் முதல்வர் முனைவர் பிரேம் நசீர்   ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.