ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் அணியில் கடலூர் பெண் தேர்வு !

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு தமிழக வீராங்கனை இளவேனில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய துப்பாக்கி சுடுதல் அணியை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பெண்களுக்கான 10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இடம் பிடித்துள்ளார்.