முன்னனி தலைவர்கள் வேடமிட்டு பிரச்சாரம் செய்யும் பாஜக கலை பிரிவினர்

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி முழுவதும் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தமிழக பாஜக கலை கலாச்சார பிரிவின் சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் வாக்கு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இதில் 15க்கும் மேற்பட்ட கலைஞர்கள்,புரட்சி திலகம் எம்.ஜி.ஆர்,பிரதமர் மோடி போன்ற வேடமிட்டு   தொகுதி முழுவதும் சுற்றி சுற்றி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.

இது குறித்து பா.ஜ.க.கலை மற்றும் கலாச்சாரபிரிவின் செயலாளர் சண்முகம் கூறுகையில்,

மொடக்குறிச்சி சட்டமன்ற பாஜக வேட்பாளர் சரஸ்வதி  செல்லுமிடமெல்லாம்,நாங்கள் உருவாக்கிய பிரச்சார பாடல்கள் மிகுந்த வரவேற்பைபெற்றதாகவும், குறிப்பாக.. “வாங்க டாக்டர் சரஸ்வதி…. வணக்கங்க சரஸ்வதி…எனும் பாடல் மொடக்குறிச்சியின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து அனைவரின் வரவேற்பை பெற்றதாக அவர் தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் டாக்டர் முருகன் அவர்களுக்கு தாராபுரம் தொகுதியிலும் “வாங்க முருகன் வணக்கங்க டாக்டர் முருகன்” போன்ற பாடல்களும், தேசிய மகளர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் அவர்களுக்கு ஜெயலலிதா அம்மா அவர்களின் குரலில் செய்வீர்களா, செய்வீர்களா என்ற வசனம்  கோவை தெற்கு  தொகுதியில் எங்கும் ஒலிப்பதாகவும் கூறினார்