சிறு குறு தொழில்களுக்கான அமைப்பான தமிழ்நாடு லகு உத்தியோக பாரதி அமைப்பினர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரிப்பதாக கோவையில் புதன்கிழமை (31.3.2021)செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
கோவை கேரளா கிளப் அரங்கில் நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வமைப்பின் தேசிய, மாநில, மற்றும் கோவை மாவட்ட உறுப்பினர்கள் இணைந்து செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
வானதி சீனிவாசனின் பங்களிப்பு தொழித்துறையினர்க்கு கடந்த ஆண்டுகளில் மிக முக்கியமானதாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. கோவையை இராணுவ தளவாடங்களுக்கான உற்பத்தி பகுதியாக அறிவித்தது. இராணுவ தளவாடங்களுக்கான புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்காக செயல்படும் மையம் மற்றும் இன்னோவேஷன் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையம் அமைவதில் உறுதுணையாக அவர் இருந்தார் என தெரிவித்தனர்.
மேலும் ஜி.எஸ்.டி அறிமுக காலகட்டத்தில், மத்திய அரசை நேரடியாக தொழில் துறையினர் அணுகி பேசுவதற்கு வானதி சீனிவாசன் பாலமாக இருந்து, குறை நிறைகளை எடுத்து சொல்வதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
ஆகவே சிறுகுறு தொழில் முனைவோரின் முன்னேறத்திற்காக அவர் ஆற்றிய உதவியின் அடிப்படையில், வரும் சட்டமன்ற தேர்தலில் கோவை மாநகர தொழில் முனைவோருக்கு மேலும் வளர்ச்சியையும் நல்ல திட்டங்களை தருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான வானதி சீனிவாசனை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.