எதிர்கட்சி எம்.எல்.ஏ என்பதால், ஒரு சில பணிகள் செய்ய முடியாமல் இருந்தது – சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர்  

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் நா.கார்த்திக்     உக்கடம் அருகே ஜி.எம்.நகர் பகுதியில் இன்று (30.3.2021) பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வீடு வீடாக சென்று வாக்குசேகரித்து, பொதுமக்கள் முன்னிலையில் பேசும் போது:

இந்த பகுதியில், தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பல்வேறு பணிகளை செய்திருந்தாலும், எதிர்கட்சி எம்.எல்.ஏ என்பதால், ஒரு சில பணிகள் செய்ய முடியாமல் இருந்தது.

திமுக ஆட்சி காலத்தில் தான் வீ்ட்டு மனைகள் வரைமுறைப்படுத்தப் பட்டது   எனவும்,  இந்த பகுதியில் இஸ்லாமியர்கள் பெருமான்மையாக உள்ளனர் எனவும், திமுக எப்போதும் சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக உள்ளது என்று கூறினார்.

ஏப்ரல் 6 ந்தேதி  உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வையுங்கள் என்று கூறினார்.