தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பழங்குடி இன மக்களுடன் இணைந்து நடனமாடி வாக்கு சேகரித்தார்.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் எஸ்.பி வேலுமணி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
இதற்காக தன் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி (29.3.2021)கெம்பனூர், அட்டுக்கல் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அட்டுகல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசை இசைத்தும், நடனம் ஆடியும் உற்சாக வரவேற்பளித்தனர்.
அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களுடன் இணைந்து பழங்குடியின மக்களின் இசைக்கு ஏற்ப நடனம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.