என் எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக தான் – கமல்  

கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் (26.3.2021) பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் அவர், என்னுடைய சக போட்டியாளர்கள் என்னை வெளியூர்காரர் என்கின்றனர்,  நான் கோவைக்குதான் வர போகின்றேன், என்னை வெளியூர்காரன் என்று சொல்லுபவர்கள் கோவையில் எனக்கு வாடகைக்கு அல்லது சொந்தமாக  வீட்டை பாருங்கள்  என்று கூறினார்.

எனது 60 வருட வாழக்கையை வெற்றி கரமாக நடத்தியது இந்த தமிழகம்,என் எஞ்சிய வாழ்க்கை  உங்களுக்காக தான்   எனவும், எங்களை பார்த்து மற்றவர்களுக்கு தொடை நடுக்கம் ஏற்பட ஆரமித்து விட்டது என்றார்.

தமிழகத்தில் பாதி டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அந்த இடங்களில் மனோதத்துவ மருத்துவர்களை வைத்து சிகிச்சை கொடுக்க வேண்டும்   எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கோவை உப்பிலிப்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பெண் குழந்தைக்கு நட்சத்திரா என்று பெயர் வைத்தார். அப்போது குழந்தையின் பெற்றோர்களை பார்த்து குழந்தைக்கு நான் பெயர் வைக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் மகிழ்ச்சியடைய செய்கிறது. அதே சமயத்தில் கரோனா காலத்தில் குழந்தையை எடுத்து வந்தது வருத்தமளிக்கிறது என்றும்  பெயர் வைத்தவுடன் குழந்தையை பத்திரமாக வீட்டிற்கு எடுத்து செல்லும் படி கூறினார்.