100 நாட்களில் குறைகள் அனைத்திற்கும் தீர்வு – பையா ஆர்.கிருஷ்ணன் வாக்குறுதி

கோவை மாநகர் மேற்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் பையா ஆர்.கிருஷ்ணன் (24.03.2021) புதன்கிழமை அன்று பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

 அப்போது பேசிய அவர்,தி.மு.க ஆட்சி அமைந்து, ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆனதும் எங்களது தேர்தல் அறிக்கையில் கூறியது போல மக்களுக்கான பல எண்ணற்ற நலத்திட்டங்களை செய்வதோடு, 100 நாட்களில் உங்களது குறைகள் அனைத்திற்கும் உடனடி தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இப்பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் கவுண்டம்பாளையம் தொகுதி பொறுப்பாளர் பி.வி.மணி, கொ.ம.தே.க வின் மாவட்ட செயலாளர் குழந்தைவேலு, ம.தி.மு.க வின் தொகுதி பொறுப்பாளர் தங்கவேலு மற்றும் தி.மு.க வின் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அசோக், செந்தில்ராஜா, குருடம்பாளையம் சரவணன், ஆறுச்சாமி, வேலுச்சாமி, பழனிச்சாமி, ஒன்றிய கழகப் பொறுப்பாளர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் விஜயகுமார், ரங்கநாயகி, ரமேஷ் மற்றும் அரசூர் பூபதி, சிங்கை ரவிச்சந்திரன், சஹா விக்னேஷ் மற்றும் ம.தி.மு.க வின் விஷ்வராஜ், முத்துசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராகவன், தம்பி வினோத் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.