அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் பிரச்சாரம்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளாராக அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் கே.ஆர்.ஜெயராம் அந்த பகுதியில் இன்று (23.3.2021) பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஏழு உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என, ஒரே பெயரில் அழைப்பதற்கு சட்ட மசோதா நிறைவேற்றியதற்கு, நன்றி தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதென அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில்   கே.ஆர்.ஜெயராம் பிரச்சாரம் மேற்கொண்ட போது அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் நிறுவன தலைவர் மனுநீதி சோழன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பேரவையினர் வாக்கு சேகரித்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க.வேட்பாளர் ஜெயராம் கூறியதாவது:

தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தபடி தேவேந்திர்குல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளதாகவும், இதனால் இந்த பகுதியில் உள்ள அந்த சமூக மக்கள் தமக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார் . மேலும் கடந்த காலங்களில் தமிழக அரசு செய்த சாதனைகள் தம்மை வெற்றியடைய செய்யும் என   தெரிவித்தார்.