பையா கவுண்டரை வாக்கு சேகரிப்பின் போது மலர் தூவி வரவேற்ற கிராம மக்கள்

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை மாநகர் மேற்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் முற்போக்கு கூட்டணியின் சார்பாக கழக வேட்பாளராக போட்டியிடுகின்ற பையாக்கவுண்டர் இன்று (22.03.2021) திங்கட்கிழமை பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, பன்னீர்மடை, நஞ்சுண்டாபுரம், சின்னத்தடாகம், 24 – வீரபாண்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.  அப்போது கிராம மக்கள் அனைவரும் மலர் தூவி வரவேர்த்தனர்.

இப்பிரச்சாரப் பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் கவுண்டம்பாளையம் தொகுதி பொறுப்பாளர் பி.வி.மணி மற்றும் ம.தி.மு.க வின் தொகுதி பொறுப்பாளர் தங்கவேலு மற்றும் தி.மு.க வின் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆனைகட்டி மதன், ஆனந்தகுமார், ஒன்றிய கழகப் பொறுப்பாளர் சி.எம் கிருஷ்ணகுமார் மற்றும் சி.பி.எம் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் கேசவமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ராகவன் மற்றும் ம.தி.மு.க வின் ராயப்பன், பகுதி செயலாளர் விஷ்வராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சரவணக்குமார், ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் மற்றும் தி.மு.க வின் அரசூர் பூபதி, சிங்கை ரவிச்சந்திரன், டி.டி.எஸ்.மூர்த்தி, டி.வி.செல்வராஜன், திருநாவுக்கரசு, செல்வராஜ், ஆனைகட்டி பழனிச்சாமி, ஐடி விங் ஹரீஷ், பி.டி.கோபால்சாமி, அருள்காந்தி, சூரியன்தம்பி, தனக்குமார், சஹா விக்னேஷ், அசோக், மனோஜ், தினேஷ், மதன் மகளிர் அணியினர் மாணிக்கம் மயில்சாமி, வளர்மதி, செல்வராணி, பிரபாவதி, சாந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புக்கள் திரளாக கலந்து கொண்டனர்.