கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று (08.01.17) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கினார். உடன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன், மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள்.