தமிழக சட்ட மன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இன்று (17.3.2021) உக்கடம், வைசியாள் வீதி, பெரியகடை வீதி ஆகிய பகுதிகளில் பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
முன்னதாக உக்கடம் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் கெம்பட்டி காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து அப்பகுதி மக்களிடமும் வாக்கு சேகரித்தார்
மேலும், ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 84 வது வார்டு செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் 80 பேர் பாஜகவில் இணைந்தனர்.
இதனை தொடர்ந்து, சாலையோர வியாபாரிகளுடன் கலந்துரையாடி, பிறகு அவர்களுடன் மதிய உணவை சாப்பிட்டார்.