தேசிய அளவிலான சிலம்பம் போட்டி: 3 தங்க பதக்கங்களை வென்ற கற்பகம் பல்கலைக்கழக மாணவர்கள்

கோவை : தேசிய அளவிலான 17வது சிலம்பம் போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 4.3.2021 முதல் 7.3.2021 வரை நடைபெற்றது. இதில் 18 மாநிலங்களிலிருந்து மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர். இந்தப்போட்டியில் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் இரட்டையர் பிரிவில் மாணவர்கள் தஷாதன் மற்றும் கெளசிக் 2 தங்கப்பதக்கமும், கத்தி வரிசை பிரிவில் மாணவர் முருகானந்தமும் 1 தங்கப் பதக்கம் என மொத்தம் 3 தங்க பதக்கங்களை பல்கலைக்கழக மாணவர்கள் வென்றுள்ளனர்.