அரோமா பேக்கரியின் புதிய கிளை துவக்கம்

கோவை சுந்தராபுரம் செங்கப்பகோனார் மண்டபம் அருகில் அரோமா பேக்கரியின் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது.

கோவையில் கேக் மற்றும் ஸ்நாக்ஸ், பால் பொருட்கள் என்று தனக்கென தனி முத்திரை பதித்து வரும் நிறுவனம் அரோமா பேக்கரி. கோவை உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் தனது கிளைகளை உருவாக்கி வாடிக்கையாளர்களிடையே நன் மதிப்பை பெற்றுள்ள இதன் புதிய கிளை கோவை சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் சாலையில் உள்ள செங்கப்ப கோனார் திருமண மண்டபம் அருகில் இன்று (10.3.2021) துவங்கப்பட்டது. அரோமா பேக்கரியின் நிறுவன தலைவர் அரோமா பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். தொடர்ந்து மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலின் அறங்காவலர் மருதாச்சலம் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கிளை பொறுப்பாளர் அசோக்குமார் செய்திருந்தார். புதிய கிளையில் அனைத்து வகை க்ரீம் கேக்குகள், ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகள், பால் பொருட்கள் என அரோமா பேக்கரியின் அனைத்து வகையான ஸ்நாக்ஸ் வகைகளும் உள்ளன. விழாவில் நல்லறம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் முருகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.