வெள்ளியங்கிரி மலை ஏற்றத்திற்கு இன்று முதல் வனத்துறை அனுமதி

பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கு இன்று முதல் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

கோவை பூண்டி வெள்ளியங்கிரி கோவில் ஏழாவது மலை உச்சியில் சுயம்பு வடிவில் சிவலிங்கம் உள்ளது. அங்கு சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு பிப்ரவரி முதல் மே வரையிலான நான்கு மாதங்களுக்கு வனத்துறை அனுமதி வழங்குகிறது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றுக் காரணமாக தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி துவங்கியும் தடை நீட்டிக்கப்பட்டது. அரசியல் கூட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பதால் மலையேற்றத்துக்கு அனுமதிக்க இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து கடந்த 18-ம் தேதி வனத்துறை ஆலோசனை கூட்டம் நடத்தியது. பூண்டி கோவில் நிர்வாகம் சார்பில் கிரிமலை உண்டியல் உள்ளிட்டவற்றுக்கு 42.50 லட்சம் ரூபாய் டெண்டர் விடப்பட்டது. அதையடுத்து மலை ஏற்றத்துக்கு அனுமதி வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை போளூவாம்பட்டி வனத்துறை அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் இன்று முதல் பூண்டி மலையேற்றம் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கிரி மலை செல்லும் வழியில் 40 கடைகள் அமைக்க பழங்குடியினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.