தூய்மை பணி துவக்கம் !

கோவை, சரவணம்பட்டி விநாயகபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தை பொதுமக்களுக்காக தூய்மைப்படுத்தும் பணியினை தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்புடன், 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை இணைத்து “மூன்று மணி நேர அதிரடி சேவையை” இன்று திங்கள்கிழமை (1.3.2021) தொடங்கினர்.

நிகழ்ச்சியின் முடிவில் காலை உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.