பச்சமலை முருகன் கோவிலில் புது கட்டடங்கள் திறப்பு !

பச்சமலை முருகன் கோவிலில், புது கட்டடங்களை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

கோபியில், பிரசித்தி பெற்ற பச்சமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கோவில் திருப்பணி ஒருங்கிணைப்பாளர் முத்து ரமணன், தங்கத்தேர் செல்லும் பாதைக்கு, பாலம் அமைத்து விரிவாக்கம் செய்தும், அன்னதான மண்டபம் மற்றும் மடப்பள்ளி கட்டடங்களை அமைத்தும் கொடுத்தார். இவற்றை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அண்மையில் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வில், திருப்பணிக்குழு  தலைவர் ஈஸ்வரன், திருப்பணி ஒருங்கிணைப்பாளர் முத்து ரமணன், செயல் அலுவலர் சீனிவாசன், திருப்பணி குழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.