அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ரியல் எஸ்டேட் எழுச்சி தின மாநாடு காளப்பட்டியில் அமைந்துள்ள கெட்டிமேளம் மஹாலில், 13ம் தேதி சனிக்கிழையன்று நடைபெற்றது. இதில் பாராட்டு விழா, பதவி ஏற்பு விழா, அடையாள அட்டை வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

ஃபைரா (Faira) தேசிய அமைப்பு செயலாளர் நேரு நகர் நந்து அவர்களின் தலைமையில், தேசிய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில், மாநில துணைத் தலைவர் செல்வகுமார் அவர்களின் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தேசியத் தலைவர் ஹென்றி எழுச்சியுரை ஆற்றினார், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையாளர் பிரதாப் குமார், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், முன்னாள் காவல்துறை கூடுதல் தலைவர் காமராஜா ஐபிஎஸ், பன்னாட்டு அரிமா சங்கத்தின் ஆளுநர் கருணாநிதி ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.